பொங்கல் விழாவில் அடிதடி

சிவகாசி, ஜன.18: சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. அப்போது போட்டிகளை நடத்திக்கொண்டிருந்த காளிமுத்து(71) என்பவரிடம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வம்பிழுத்து தாக்கியுள்ளனர்.

இதில் காளிமுத்து படுகாயம் அடைந்தார். சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த முருகேசன், பிச்சைக்கனி, வைரம், சந்தோஷ் ஆகிய 4 பேர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: