போடியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம்

போடி, ஜன. 18: போடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு வந்துள்ள மக்காச்சோளம் தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போடி பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களான சுந்தரராஜபுரம், அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன் பட்டி, நாகலாபுரம், திமி நாயக்கன்பட்டி, பொட்டிபுரம், சிபில்ன்ன பொட்டி புரம், ராசிங்காபுரம், சிலமலை, சில்லை மரத்துப்பட்டி, மீனாவிலக்கு, தோப்புபட்டி, துரைராஜபுரம் காலனி, முந்தல் போன்ற பல கிராமங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோளம் விவசாயம் செய்யப்பட்டிருந்தது.தற்போது மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுக்கப்பட்ட மக்காளச்சோளக்கதிர்கள் களங்களில் குவித்து இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கும் பணி தீவிரமாக வருகிறது. விலையும் கட்டுப்படியாகும் வகையில் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மிகழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: