கம்பம், ஜன.18: கம்பம் அரசு மருத்துவமனையில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு நேற்று தலைமை மருத்துவ அலுவலர் பொன்னரசன் தலைமையில், தலைமை குடிமை மருத்துவர் அமுதினி, மயக்கவியல் மருத்துவர் தமிழ்வாணன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் ஜெனி முன்னிலையில் மருத்துவமனை பணியாளர்கள் வைத்து பொங்கல் வைத்துகொண்டாடினர். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் வெளி நோயாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு ஊழியர்கள் பொங்கல் வழங்கினர்.
இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நோயாளிகளுக்கு மருத்துவமணையில் பொங்கல் வழங்கியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகையொட்டி மருத்துவமனையில் கரும்புகள், கோலங்கள், தோரணங்கள் கட்டியு அலங்கரிக்கப்பட்டிருந்தது.