சிவகங்கையில் நாளை மின்தடை

சிவகங்கை, ஜன.18: சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சிவகங்கை, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், தமறாக்கி, மலம்பட்டி, புதுப்பட்டி, இடையமேலூர், மேலப்பூங்குடி உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்தார்.

Related Stories: