நாகர்கோவில், ஜன. 18: குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் ₹6 கோடியே 80 லட்சத்திற்கு மது வகைகள் விற்பனையானது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கடைகள் திறக்கப்படவில்ைல. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் கள்ளச்சந்தையில் மதுவகைகள் விற்பனை செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க எஸ்பி நாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்றதாக 19 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். கருங்கல் செடலிவிளை பகுதியில் மது விற்றுக்கொண்டு இருந்த வடலிவிளையை சேர்ந்த சசிகுமார்(43) என்பவரை கருங்கல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இரணியல் அருகே உள்ள நங்கன்விளை பகுதியில் மது விற்ற நுள்ளிவிளையை சேர்ந்த கிருஷ்ணகுமார்(42), நுள்ளி விளையில் மதுவிற்ற தங்க நாடார் மனைவி பேபி(68) ஆகியோரை இரணியல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.