நாகர்கோவில், ஜன.18: குமரி மகா சபா 6வது ஆண்டு விழா நாளை 19ம் ேததி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, நாகர்கோவில் டவர் ஜங்ஷனில் உள்ள ஓட்டல் பயோனியர் கிராண்ட் பேலஸில் வைத்து நடைபெறுகிறது. விழாவிற்கு குமரி மகா சபா நிறுவன தலைவர் ராவின்சன் தலைமை வகிக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு ‘சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். முன்னதாக விழாவில் மது சிக்ரி குத்துவிளக்கு ஏற்றுகிறார். குமரி மகா சபா செயற்குழு தலைவர் தம்பிராஜ் அறிமுக உரை வழங்குகிறார். கவுரவ தலைவர் சொக்கலிங்கம் வரவேற்கிறார். செயலாளர் ஜாண்சன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். குமரி மகா சபாவின் வளர்ச்சி தொடர்பாக துணை தலைவர் சந்திரமோகனும், செயல்திட்டங்கள் குறித்து துணை தலைவர் ஜேசர் ஜெபநேசனும் பேசுகின்றனர்.