தர்மபுரி மாவட்ட பாஜ., நிர்வாகிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி மாவட்ட பாஜ நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று தர்மபுரியில் நடந்தது.

எனது வாக்குசாவடி, வலுவான வாக்குசாவடி என்ற தலைப்பின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள அரக்கோணம், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்ட பாஜ நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று பகல் 12.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. இதையொட்டி தர்மபுரி- பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய அரசின் திட்டங்களின் மாவட்ட பொறுப்பாளர் பரத்வாஜ், தமிழக மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் கணேசன், அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் ஒன்றிய, நகர தலைவர்கள், அணியின் பிரிவு தலைவர்கள், பூத் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: