பெரம்பலூர், ஜன. 11: பெரம்பலூர் மாவட்டத்தில் புனித தலங்கள் மற்றும் கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித தலங்கள் மற்றும் கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு 62 வயதுக்கு உட்பட்ட, எழுத படிக்க தெரிந்த, தகுதியும் விருப்பமும் உள்ள, முன்னாள் படைவீரர்கள், அசல் படைவிலகல் மற்றும் அடையாள அட்டையுடன் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்நல உதவி இயக்குநர் அலுவலகத்தை (தொலைபேசி எண் 04329-221011) அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.