பெரம்பலூர், ஜன. 11: இந்திய இரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களில் சேர முன்னாள் படைவீரர்கள் வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது:முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில் இந்திய ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் www.Indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து இணையதள விண்ணப்பத்துடன் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.