முப்படைகளில் அலுவலராக சேர விண்ணப்பித்த மாஜி படைவீரர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி

பெரம்பலூர், ஜன. 11:  ஒருங்கிணைந்த முப்படைகளில் அலுவலராக சேர்வதற்கு விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு சென்னை முன்னாள் படைவீரர்நல இயக்ககத்தில் முன்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது:

ஒருங்கிணைந்த முப்படைகளில் அலுவலராக சேர்வதற்கு வருகிற பிப்ரவரி 3ம் தேதிநடைபெறவுள்ள தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு 10 முதல் 15 நாட்கள் சென்னை முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் முன்பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பித்த இணையதள விண்ணப்பத்துடன் அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித் துள்ளார்.

Related Stories: