பெரம்பலூர், ஜன. 11: ஒருங்கிணைந்த முப்படைகளில் அலுவலராக சேர்வதற்கு விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு சென்னை முன்னாள் படைவீரர்நல இயக்ககத்தில் முன்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது:
ஒருங்கிணைந்த முப்படைகளில் அலுவலராக சேர்வதற்கு வருகிற பிப்ரவரி 3ம் தேதிநடைபெறவுள்ள தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு 10 முதல் 15 நாட்கள் சென்னை முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் முன்பயிற்சி வழங்கப்படவுள்ளது.