கடைக்குள் புகுந்த கல்லூரி பேருந்து

வெள்ளக்கோவில், ஜன.11: வெள்ளக்கோவில் கட்டுபாட்டை இழந்த கல்லூரி பேருந்து கடையில் புகுந்த்து.வெள்ளக்கோவில் கடைவீதியில் கள்ளமடை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(35)  என்பவர் கரூர்  சாலையில், கோபி மொபைல்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் காங்கயத்திலிருந்து கரூர் நோக்கி வந்த லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது முத்தூர் ரோட்டிலிருந்து வந்த தனியார் கல்லூரி பேருந்து திரும்பிய வேகத்தில் கடைக்குள் புகுந்தது.

இதனால் கடையின் முன், இருந்த அலுமினிய பந்தல், விளம்பர போர்டு, ஆகியன சேதமடைந்தன. அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி பேருந்தை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: