குமரி மாவட்டத்திற்கு ஜன.21ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில், ஜன.11: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:  நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 21ம் தேதி (திங்கள்கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. ஜனவரி 21ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக பிப்ரவரி மாதம் 2வது சனிக்கிழமை (9.2.2019) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். ஜனவரி 21ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் வகையில் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.

Related Stories: