டிஜிபி அலுவலக ெபண் ஊழியர் வீட்டில் கொள்ளை கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை

நாகர்கோவில், ஜன.11: நாகர்கோவில் அருகே டிஜிபி அலுவலக பெண் ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில், புத்தேரி, பெருமாள்நகரில் உள்ள எம்ெபருமாள் நகர் 9வது குறுக்குதெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(31). இவரது மனைவி பிரசன்னகுமாரி. இவர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக உள்ளார். கோபாலகிருஷ்ணனின் வீட்டின் பின்புற ஜன்னலை உடைந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 32 பவுன் நகைகள் மற்றும் ₹1 லட்சத்து 38 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான கைரேகையை பதிவு செய்தனர். மோப்பநாய் சிறிது தூரம் ஓடியும் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. வீடு பூட்டிக்கிடப்பது தெரிந்தே கொள்ளை நடைபெற்றுள்ளது. எனவே உள்ளூர் ஆசாமிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை தொடர்பாக இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் தெரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியவர்கள், ஊரைவிட்டு திடீரென்று காணாமல் போன நபர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: