ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆத்தூர், ஜன.10:  சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1969ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த பழைய மாணவர்கள் தங்களின் பொன்விழா சங்கம நிகழ்ச்சியை அண்மையில் கொண்டாடினர். நிகழ்ச்சியில் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கியதோடு, பள்ளி பருவத்தில் தங்களுக்கு அவர்கள் பாடம் நடத்திய விதம் மற்றும் தங்களுடன் அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆகியவைகளை நினைவு கூர்ந்து மகிழ்வித்தனர். பின்னர் தங்களுடன் படித்த நண்பர்களின் இன்றைய நிலையையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்.

 நிகழச்சியில், அன்றைய மாணவர்களாக இருந்து, இன்றைக்கு வழக்கறிஞர்களாக, பொறியாளர்களாக, வியாபாரியாக, விவசாயியாக, தொழிலாளர்களாக மாறியுள்ளவர்கள் சந்தித்து தங்களின் வாழ்வின் உயர்வு தாழ்வுகளை பழைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு பலரும் தங்களின் குடும்பத்தினரையும், பேரன், பேத்திகளையும் அழைத்து வந்திருந்தனர்.

Related Stories: