பெண்ணிடம் ஆபாச பேச்சு; வாலிபர் கைது

ஆட்டையாம்பட்டி, ஜன.10:  சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பைரோஜி வாதரசம்பட்டியை சேர்ந்த ராஜி மகன் செல்வம் (32). இவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மேலும் திருட்டு தொழிலையும் செய்து வந்தார். ஒரு திருட்டு வழக்கில் இவருக்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மனைவி பேபி (42) நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், குடிபோதையில் பேபி வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசினார். மேலும் ஜாதியை பற்றியும் தரக்குறைவாக பேசினார். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதனடிப்படையில் செல்வம் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: