பள்ளிபாளையம், ஜன.10: பள்ளிபாளையத்தில் அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட வழக்கில், டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுபோல், அதிகாரிகள் கொடுத்த புகாரை கொண்டு, டிரைவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு புறநகர் கிளை, பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு டிரைவராக பணியாற்றி வரும் பாரதிதாசன், கடந்த 7ம் தேதி காலை பணிக்கு வந்தபோது, அவருக்கு பணி கொடுக்க மறுத்த கிளை மேலாளர் ஜெகதீசன், மேற்பார்வையாளர் தங்கவேல், ஆடிட்டர் ராமானுஜம் ஆகியோர் அடித்து உதைத்ததாக, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து பாரதிதாசன் சிகிச்சை பெற்று வருகிறார்.