தர்மபுரி, ஜன.10: தர்மபுரி மாவட்ட திமுக சார்பில், ஊராட்சிகள் தோறும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்ட திமுக சார்பில், நேற்று குண்டல்பட்டி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் எச்சனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பண்டஅள்ளி மற்றும் ராஜாகொல்லஅள்ளி கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பார்.இளங்கோவன், தமிழ் மணி, எழும்பூர் எம்எல்ஏ ரவிசந்திரன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினர். கூட்டத்தில் தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள மக்கள் விரோத அரசை அகற்ற வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து மக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இதே போல், ஏரியூர் ஒன்றியம் மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி சின்னகடமடையில், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களது கருத்துக்கள், தேவைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் வீரமணி, காளியப்பன், சம்பத்குமார், அண்ணாதுரை, மூர்த்தி, தனபால், கோவிந்தராஜ், முனுசாமி, பவுன்ராஜ் மற்றும் பொதுமக்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம்: காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கும்பாரஅள்ளி, அடிலம் ஊராட்சிகளில் திமுக சார்பில், ஊராட்சி கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை வகித்தார். திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் மணி, முன்னாள் தலைவர் அன்பழகன், அவைத்தலைவர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தர்மபுரி தேர்தல் பொறுப்பாளர் பார்.இளங்கோவன், தமிழ்மணி, மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ கே.சி.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.