சிந்தல்பாடி சாலையில் பழுதான மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

கடத்தூர், ஜன.10: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மொரப்பூர்-சிந்தல்பாடி பிரதான சாலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் மின்கம்பம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மின்கம்பம் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பலத்த காற்று வீசும் போது, மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: