வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிப்பு

மதுரை, ஜன. 10: இரண்டு நாட்கள் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டதால், மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஏடிஎம்.களில் பணம் நிரப்பப்படாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் முழுவதும் 28 வங்கிகளின் 300 கிளைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 2,500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டத்தில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதித்தது. மேலும் 2 நாட்கள் நடந்த வேலை நிறுத்தத்தால், பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Related Stories: