திண்டுக்கல், ஜன. 10: வீட்டை வீட்டு ஓடி வந்து திண்டுக்கல் ரயில்நிலையத்தில் தவித்த 4 மாணவர்களை மீட்டு ரயில்வே போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் ரயிநிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 4 மாணவர்கள் செய்வதறியாது அங்குமிங்கும் திரிந்தனர். இதை கவனித்த ரயில்வே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் மதுரை கே.புதூரை சேர்ந்த நாகராஜ் மகன் கவின்குமார் (16). இவரது நண்பர்கள் குணா (16), சந்தோஷ் (16). பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கவின்குமார் பாலிடெக்னிக்கிலும், சந்தோஷ் ஐடிஐயிலும், குணா 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கவின்குமார் வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் நண்பருக்காக மற்ற 2 பேர் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.