பாவை போட்டி பரிசளிப்பு விழா

பழநி, ஜன. 10: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாவை விழா போட்டிகள் நடத்தப்படும். இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களில் மனப்பாடம், கட்டுரை, இசை, பாட்டு போன்ற போட்டிகள் நடத்தப்படும். இந்தாண்டு பழநியாண்டவர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வயதின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: