ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையத்தில் இன்று மின்தடை

ஒட்டன்சத்திரம், ஜன. 10: ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழன்) நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒட்டன்சத்திரம் நகர், லெக்கையன்கோட்டை, புதுஅத்திக்கோம்பை, கே.அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, விருப்பாட்சி, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, காப்பிளியபட்டி, தங்கச்சியம்மாபட்டி, வெரியப்பூர், அம்பிளிக்கை, புலியூர்நத்தம் ஊர்களில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை ஒட்டன்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன்(பொ) தெரிவித்துள்ளார்.

இதேபோல் கள்ளிமந்தையம் துணைமின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கள்ளிமந்தையம், மண்டவாடி, கப்பல்பட்டி, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்காது என உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: