வாலிபர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர், ஜன. 10:  திருக்கோவிலூர் அடுத்த துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பஷீர் அகமது அன்சாரி (34). சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் திருச்சி சென்று விட்டு தனது வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

சந்தப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே வந்த போது அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து குடிபோதையில் ஆபாசமாக திட்டி தகராறு செய்ததுடன் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து பஷீர் அகமது அன்சாரி திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த பழனி மகன் முரளி(24), ராஜேந்திரன் மகன் அருள், நடராஜன் மகன் வெங்கட், ரஞ்சித் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அதில் முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: