அறிவிப்பு பலகை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி

மயிலம், ஜன. 10: மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தென் ஆலப்பாக்கம் கிராமம். இங்கு காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாதிராப்புலியூர் கிராமத்தில் இருந்து தென் ஆலப்பாக்கம் வழியாக மயிலம் மற்றும் வானூர், புதுவை பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலை அமைக்கும் பணி நடப்பதால் அவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் உட்பட எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியவில்லை. இவ்வாறு உள்ள நிலையில் சாலை பணி நடக்கிறது என்ற எச்சரிக்கை பலகை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைக்காததால் பாதிராப்புலியூர் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் வந்து, வழி இல்லாததால் மீண்டும் திரும்பி சுமார் 8 கிலோமீட்டர் சுற்றி மயிலம்-புதுவை சாலையை வந்து செல்லவேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலை பணி முடியும் வரை முன்னெச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: