கோவை, ஜன. 9: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பொருட்களில் கலப்படம் கண்டறியவது குறித்த பயிற்சி செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் 148 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கலப்படம் உணவை கண்டறிவது தொடர்பான பயிற்சி வழங்க உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, 23 உணவு பாதுகாப்பு அலுவலர்களின் மூலம் வட்டார பகுதிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மற்றும் 4 மாணவர்களுக்கு எளிய முறையில் உணவில் கலப்படம் கண்டறிதல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது வரை மொத்தம் 113 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.