மதுரை, ஜன. 9:மதுரையில் நிலா சேவை அமைப்பு சார்பில் 14ம் ஆண்டு குழந்தைகள் கலை விழா நடந்தது. குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை அறக்கட்டளை இணைச் செயலாளர் சின்ன முருகன், பொறியாளர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் மோகன கண்ணன், பிரியா, கவிஞர் சூரியபிரபா துவக்கி வைத்தனர்.மதுரை நகர் போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன் தலைமை வகித்தார். முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திருச்சி சந்தர், மணியம்மை பள்ளி தாளாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர்.