லாட்ஜ் ஊழியர் விபத்தில் பலி

பழநி, ஜன. 9: பழநி அருகே சின்னவேலம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவக்குமார் (27). பழநியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் ஊழியராக இருந்தார். நேற்று வேலை முடித்துவிட்டு சிவக்குமார் தனது டூவீலரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். புளியம்பட்டி அகதிகள் முகாம் அருகே சென்ற போது எதிரே வந்த மினிவேன் சிவக்குமாரின் டூவீலர் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: