ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சட்ட உதவி மையம்

ஒட்டன்சத்திரம், ஜன. 9: ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்காக 3வது ஆண்டாக சிறப்பு சட்ட உதவி சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முரளிசங்கர் திறந்து வைத்தார். இதில் நீதிபதிகள் மதுரசேகரன், நம்பி, விஜயக்குமார், முருகன், பிரவின்குமார், டிஎஸ்பி சந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், கோர்ட் ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர், ஒளிரும் குச்சிகள், சட்டத்துறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: