பழநியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி

பழநி, ஜன. 9: பழநி நால்ரோடு சந்திப்பில் உள்ள சிறுமலர் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 1978ம் ஆண்டு 1ம் முதல் 5ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியர் சந்தித்து கொண்டனர். முன்னாள் மாணவர் சதீஷ்குமார் தலைமை வகிக்க, பள்ளி தாளாளர் லில்லி வர்கீஸ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர்கள் ஏஞ்சலா மேரி, ரெக்ஸின் அவிலா செல்வி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவியர் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு பழைய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் பலரும் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர். முன்னாள் ஆசிரியர்கள் லீலா, தேவி, ஜோதி, ஜெயலட்சுமி, விசாலாட்சி, ராஜேஸ்வரி ஆகியோருக்கு மேடையில் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சேதுராமலிங்கம், ராம்சுந்தர், குமரேசன், பாலகிருஷ்ணன், மூர்த்தி, நாகஜோதி, மகேஷ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: