திண்டுக்கல், ஜன. 9: கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டு ஆனவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 36 மாதத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பிப்.28க்குள் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகும் வேலை கிடைக்காதவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன்படி பத்தாம் வகுப்பு தோல்வி முதல் பட்டதாரிகள் வரை ரூ.200 முதல் ரூ.600 வரை வழங்கப்படுகிறது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.ஆயிரம் வரை உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.