வாய்க்காலில் மூழ்கி விவசாயி பலி

பழநி, ஜன. 9: பழநி அருகே கரடிகூட்டம், தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). விவசாய தொழிலாளி. நேற்று இங்குள்ள பாலாறு- பொருந்தலாறு இடதுபிரதான வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்து விட்டார். தகவலறிந்ததும் பழநி தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் 1 மணி நேரம் தேடி முருகனின் உடலை மீட்டனர். இறந்தவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலவச கல்லூரி படிப்பு

கல்லூரி கல்வித்துறை சார்பில் பெரியார் ஈவெரா.நாகம்மை நினைவு மகளிர் இலவச படிப்புத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான வருமானச்சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.நிபந்தனைகள்: அரசு மற்றும் உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து இன மாணவ, மாணவியரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.தொடர்பு முகவரி: சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர், கல்லூரிக்கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்கம், கல்லூரி ரோடு, சென்னை என்ற முகவரியிலோ, (044) 28271911 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: