திருப்பத்தூர், ஜன.9: திருப்பத்தூர் நகராட்சிக்கு வரி செலுத்தாத பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.திருப்பத்தூர் கவுதமபேட்டை அருகே மத்திய அரசின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலகம் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குடியிருப்பு பகுதி உள்ளது.இந்த குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர்வரி பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.