ஆம்பூர், ஜன.9: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் எல்லப்பன்(66). ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் எல்லப்பன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.