ஆம்பூர் அருகே ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ஜோலார்பேட்டை, ஜன.9: பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பத்தை சேர்ந்த மணிகண்டன்(33), கார் டிரைவர். இவர் கடந்த 6ம் தேதி ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரயில் நிலையத்தை கடக்க முயன்றார்.அப்போது, சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரி சைலப் ரஞ்சன் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: