சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரள அரசை கண்டித்து அனைத்து இந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடந்தது

திருவண்ணாமலை, ஜன.4: சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள அரசை கண்டித்து நேற்று திருவண்ணாமலையில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை பாஜ ஐயப்ப பக்தர்கள் குழு, சபரிமலை ஐயப்ப பாதுகாப்பு சங்கம், அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு பாஜ மாவட்ட தலைவர் நேரு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி, ஆர்எஸ்எஸ் கோட்ட பொறுப்பாளர் நீலகண்டன், மாநில பொறுப்பாளர் ராஜசேகர், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்த கேரள அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷமிட்டனர். இதேபோல், திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், நகர தலைவர் ராஜேஷ், நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: