திரளான பக்தர்கள் பங்கேற்பு பழைய ஓய்வூதிய திட்டம் கோரி மன்னார்குடியில் விஏஓவினர் 2ம் நாளாக போராட்டம்

மன்னார்குடி, டிச. 12: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 2 ம் நாளாக மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும், உட்பிரிவு பட்டா மறுதல்களில் விஏஓகளின் பரிந்துரையை கட்டாயமாக வேண்டும், ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல்களை வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பு ஊதியத்தை உடன் வழங்க வேண்டும், விஏஓக்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் ஏனைய தள வசதியை ஏற்படுத்தி தரவேண்டும், விஏஓ அலுவலகங்களுக்கு தண்ணீர், கழிவறை மற்றும் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடன் ஏற்படுத்தி தர வேண்டும் உள் ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மன்னை வட்ட கிளையின் சார்பில் 2 ம் நாளாக நேற்று மன்னார்குடி தாலுகா அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: