நெல்லை, டிச. 11: மேலப்பாளையத்தை சேர்ந்த 50 இளைஞர்கள், திமுகவில் இணைந்தனர்.
திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் மேலப்பாளையம் மண்டலம் 29 மற்றும் 30வது வார்டுகளை சேர்ந்த ஜாகீர், யாசர், இம்ரான், சதாம் உசேன், பைசல், புரோஸ்கான் உள்பட 50 இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். தொடர்ந்து இவர்களுக்கு உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டன.