திமுகவில் 50 இளைஞர்கள் ஐக்கியம்

நெல்லை, டிச. 11: மேலப்பாளையத்தை சேர்ந்த 50 இளைஞர்கள், திமுகவில் இணைந்தனர்.

திமுக நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் மேலப்பாளையம் மண்டலம் 29 மற்றும் 30வது வார்டுகளை சேர்ந்த ஜாகீர், யாசர், இம்ரான், சதாம் உசேன், பைசல், புரோஸ்கான் உள்பட 50 இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். தொடர்ந்து இவர்களுக்கு உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டன.

 நிகழ்ச்சியில் திமுக நெசவாளர் அணி துை்ண அமைப்பாளர் முரசொலி முருகன், மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பகுதி துணை செயலாளர் ஞானியார், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சைபுதீன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஜபருல்லாகான், மைதீன், சாகுல், தமீம் அன்சாரி, ரசீத் செய்திருந்தனர்.

Related Stories: