உலக மனித உரிமை நாள் விழா

நெல்லை, டிச. 11: நெல்லையில் உலக மனித உரிமை நாள் விழா நடந்தது.

ஆண்டுதோறும் டிச.10ம் தேதி உலக மனித உரிமை நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் டிச.10ம் தேதியன்று மனித உரிமைகளுக்கான பரிசு வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் டிச.10ல் பல முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும். இதனடிப்படையில் நெல்லையில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச அமைப்பான லயன்ஸ் சங்கம், டீம் டிரஸ்ட் இணைந்து விருதுகள் வழங்கும் விழாவை நடத்தின.

இதில் நெல்ைல ரோட்டரி சங்க செயலாளர் ஜெய்லானி, தலைவர் வடிவேல் ஆகியோரின் சேவைகளை பாராட்டி லயன்ஸ் ஆளுநர்கள், காவல்துறையினர் முன்னிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: