உடன்குடி, டிச. 11: குலசேகரன்பட்டினம் திரு அருள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் சிவ பழநீசுவரன் தலைமை வகித்து இலவச சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் இலவச சைக்கிள் வழங்குவதன் நோக்கம் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை கணித ஆசிரியர் பொன்லெட்சுமணசாமி, வரலாற்று ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
கழுகுமலையில் பால்குட ஊர்வலம்கழுகுமலை, டிச.11: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் குமரவேலுக்கு 80 வது ஆண்டு பாலாபிஷேக விழா நடந்தது.கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும் இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார திங்களன்று குமரவேலுக்கு பாலாபிஷேக விழா நடைபெறும். கார்த்திகை கடைசி திங்கள் சோமவாரமான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 6.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்பாளை எழுந்தருளச்செய்யும் பூஜைகள் நடைபெற்றது.