ஸ்பிக்நகர், டிச.11: தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ரேஷன் கடை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளக்காடு ரேஷன் கடை அருகே கடந்த 1 மாதத்திற்கு மேலாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது. இதன் அருகிலேயே முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ளது. இருப்பினும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக வெளியேறி வரும் குடிநீரை அடைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லைஇதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஞ்சாயத்து உதவியாளரிடம் சென்று பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.