நாகை,டிச.11: கஜா புயலால் சேதமைடிந்த படகுகளுக்கு நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்காடு மீனவ பஞ்சாத்தார்கள் மற்றும் கோடியக்காடு கடல் மீனவர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு எங்கள் மீனவர்களின் மீன்பிடி படகுகள் மற்றும் கட்டு மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது வரை மீன்வளத்துறை மூலம் எங்கள் பகுதியில் பாதிப்புக்குள்ளான படகுகளை ஆய்வு செய்யாமல் உள்ளனர்.