கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

கரூர், டிச. 11: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மனித உரிமைகள் நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: