சிலம்பாட்ட போட்டி 300 பேர் பங்கேற்பு

விழுப்புரம், டிச. 11: விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.  மாவட்டம் முழுவதிலிருந்தும் பல்வேறு பிரிவுகளில் 300 பேர் கலந்து கொண்டனர். இதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.  

Related Stories: