அரசு பள்ளியில் பரிமாற்று திட்டம்

மயிலம், டிச. 11: மயிலம் அடுத்த பெரமண்டூர் அரசு பள்ளியில் பரிமாற்று திட்டம் துவக்க விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு மயிலம் ஒருங்கிணைந்த கல்வி திட்ட மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அப்பாண்டராஜன் வரவேற்றார். ஆசிரியர்கள் ஆல்பர்ட் ஞானஒளி, மதுசூதனன், சாந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். இந்த திட்ட வகுப்பில் திண்டிவனம் வால்டர் ஸ்கட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெரமண்டூர் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் ரேவதி நன்றி கூறினார்.

Related Stories: