ஜனவரி முதல் இலவச அரிசி

புதுச்சேரி, டிச. 11:  புதுச்சேரி சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா பத்துக்கண்ணுவில் நடந்தது. பயனாளிகளுக்கு அமைச்சர் கந்தசாமி நலத்திட்டங்கள் வழங்கி பேசியதாவது: புதுவையில் மோசமான நிதி நெருக்கடி இருந்தும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இலவச அரிசி திட்டத்தை தடுக்கிறார்கள். இருப்பினும், பயனாளி

களுக்கு 2 மாதங்களுக்கான அரிசி தொகை வங்கியில் செலுத்தியுள்ளோம். ஜனவரி முதல் மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும்.

இன்னும் 5 மாதத்தில் சோதனை காலம் முடிவுக்கு வரும். மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. கடந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு ஆதிதிராவிடர் கூட எம்எல்ஏவாக இல்லை. தற்போது 3 பேர் எம்எல்ஏவாக உள்ளோம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் 5 தனித்தொகுதியிலும் காங்கிரசை சேர்ந்தவர்களை எம்எல்ஏவாக்குவோம்.

Related Stories: