புதுச்சேரி, டிச. 11: புதுச்சேரி சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா பத்துக்கண்ணுவில் நடந்தது. பயனாளிகளுக்கு அமைச்சர் கந்தசாமி நலத்திட்டங்கள் வழங்கி பேசியதாவது: புதுவையில் மோசமான நிதி நெருக்கடி இருந்தும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இலவச அரிசி திட்டத்தை தடுக்கிறார்கள். இருப்பினும், பயனாளி
களுக்கு 2 மாதங்களுக்கான அரிசி தொகை வங்கியில் செலுத்தியுள்ளோம். ஜனவரி முதல் மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும்.