புதுச்சேரி, டிச. 11: புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் சிவாஜி சிலை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் 2 பைக்குகளில வந்தவர்களும் திடீர் பிரேக் போட்டுள்ளனர். இதில் ஒரு பைக்கில் வந்த சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29). அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோரும், மற்றொரு பைக்கில் வந்த லாஸ்
பேட்டையை சேர்ந்த கிருத்திகா (47), நிர்மலா (19) ஆகியோரும் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரும் காயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.