திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, டிச.11: திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கட்சி  அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கி தீர்மானங்கள் குறித்து பேசினார். துணை செயலாளர்கள் சேகர், செல்வராஜ், பொருளாளர் குமார், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் பரமானந்தம், ஒன்றியச்செயலாளர்கள் சண்முகம், தங்கவேல், பழனிவேல், சண்முகம், தலைமை செயற்குழு யுவராஜ், செல்வராஜ், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சார்பு அணி நிர்வாகிகள் மதுரா செந்தில், பூங்கோதை செல்லதுரை, ரங்கசாமி, கிரிசங்கர், மொளசி ராஜமாணிக்கம், விஜயகுமார், சரவணசுந்தரம், மீன் செல்வம், தினகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், மேற்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என தீரமானிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் அமைந்துள்ள அருந்ததியர், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் இளைஞர் அணி கிளை ஏற்படுத்தி கொடியேற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: