பெரியமுத்தூரில் திமுக உறுப்பினர்களுக்கு உரிமைச்சீட்டு வழங்கல்

கிருஷ்ணகிரி, டிச.11: பெரியமுத்தூர் ஊராட்சியில் திமுக உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி, விவசாய அணி மாநில துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் தலைமையில்  நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, தொமுச கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் புதுக்கோட்டை சந்திரசேகர் பங்கேற்று, 12 வார்டுகளைச் சேர்ந்த 600 பேருக்கு திமுக உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை வழங்கினார். இதில், திமுக நிர்வாகிகள் நாராயணன், ஆனந்தன், பிரகாஷ், எல்லப்பன், மூர்த்தி, சீனி, செல்வி வெங்கடேசன், சக்திவேல், கவுரப்பன், ராஜூ, கலைமணி, தங்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி ஒன்றியம் இருதுக்கோட்டையில் திமுக உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சிக்கு, கிளை செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் நாகன், நாகராஜ், வீரப்பா, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியவேலு, வழக்கறிஞர் அணி முனுசாமி, சிவசங்கர், இளைஞரணி சங்கர், மாணவரணி சத்யா ஆகியோர் இருதுக்கோட்டை, அனுமந்தபுரம், சந்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உரிமைச்சீட்டுகளை வழங்கினர்.

Related Stories: