கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம்

சிங்கம்புணரி, டிச.11: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் உள்ள சுயம்பரகேஷ்வரர் கோயிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக விழா

நடைபெற்றது. இதையொட்டி லிங்க வடிவில் 108 சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுயம்பரகேஷ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: