இலக்கிய மன்ற விழா

கோவை, டிச.11: மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு சரஸ்வதி வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் சார்பில் சிங்காநல்லூரில் எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் சுமதி, சரஸ்வதி வித்யா மந்திர் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், செயலர் மோகன்தாஸ், மேட்டுப்பாளையம் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராதிகா, பள்ளி துணை தலைவர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தரப்பட்டது. உணவே மருந்து என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு, நாடகம் நடந்தது.

Related Stories: